Monday, June 19, 2017

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம்

திருச்சி அருகாமையில் இருக்கும் எறும்பீஸ்வரர் ஆலயம் திருவெறும்பூர் என்றும் அழைக்கப்படுகிறது...2016ல் அங்கு சென்ற போது இந்த புகைப் படங்களை எடுக்க முடிந்தது.
தூண் சொல்லும் சரித்திரம், அது நமக்களிக்கும் பாடம். சரித்திரத் தேர்ச்சி கொள் என்றான் பாரதி. சேரர்/சோழர்/பாண்டியர் மற்றும் பல்லவர் ஒவ்வோர் மன்னர்களின் ஆட்சித் திறன் என்ன என்று நமக்குத் தெரியுமா? இவை சொல்லும் சரித்திரம் என்ன? இவை ஏன் பாதியிலேயே நின்று போயின? இவற்றின் சரித்திரத்திதை நாம் ஏன் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை? இவற்றின் சரித்திரத்தில் இருந்து நமது எதிர்காலம் பயனடைய என்ன செய்யலாம்? ஆயிரம் ஆயிரம் வருடங்கள் நிலைத்து நிற்கும் கற்சிற்பங்களை மன்னர்கள் கட்டி சரித்திரம் படைத்துள்ளார்கள். நாம் இன்று என்ன படைத்துள்ளோம்? சிறிய அலை வந்தால் காணாமல் போகும் மணல் சிற்பங்களை கூட நாம் செய்கிறோமா? நம்மை எதிர்காலம் 'கல்லிலே கலை வண்ணம் கண்டான்' என்று கூறுமா? நாம் கல்லிலே கலை எப்போது படைப்பது? சரி முதலில் சரித்திரம் படிப்போம், பின் காப்போம், பின் படைப்போம்.

No comments:

Post a Comment